EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

புரட்டாதி 17, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தை அமுல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயன் அளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை இந்திய மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுவதாக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

UPI மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பின்னடைவைச் சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அமெரிக்க அழுத்தத்திற்கு அரசு பணிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இதற்குப் பதிலளித்துள்ள நிதி அமைச்சகம், “UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. அவை வழக்கம்போல் இலவசமாகவே தொடரும்.

அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும்.

ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவர்.

இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரண கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும், UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே பயன்படும் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி
உலகம்

சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

புரட்டாதி 18, 2026
தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!
உலகம்

தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

புரட்டாதி 18, 2026
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்
உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்

புரட்டாதி 18, 2026
இளவரசர் ஹரி முதன்முறையாக பொதுநிகழ்வில் பங்கேற்பு
உலகம்

இளவரசர் ஹரி முதன்முறையாக பொதுநிகழ்வில் பங்கேற்பு

புரட்டாதி 18, 2026
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
உலகம்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

புரட்டாதி 17, 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம்

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புரட்டாதி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிசார் குவிப்பு

வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிசார் குவிப்பு

6 நாட்கள் முன்னர்
வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In