புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கில் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயது மதிக்கதக்க பெண் , சிவநகரை சேர்ந்த இளைஞன் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுமே காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடதக்கது.











