சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மீசாலை நகுலன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு கிராமிய விளையாட்டு நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை சனசமூக நிலைய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சுமார் முப்பது ஆண்டுகளின் பின் மீள்குடியமர்த்தப்பட்ட இம் மக்களின் முதலாவது கலை கலாசார பண்பாட்டு விழாவாக இவ் விழா அமைந்தது சிறப்பம்சமாகும்.
இதன் போது சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கிடுகு இழைத்தல், சங்கீதக் கதிரை, ஆண், பெண் இரு பாலாருக்குமான கயிறிழுத்தல், தலையணைச் சண்டை முட்டியுடைத்தல் போன்ற சுவாரஸ்யமான விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தது.
நகுலன் சனசமூக நிலைய தலைவர் மகாலிங்கம் மதுஷன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மன்னார் மாவட்ட செயலர் கனகசபாபதி கனகேஸ்வரன் மற்றும் வைத்தியர் சிவசாதனா தினேஸ், வைத்தியர் வினாசித்தம்பி கஜீபன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி கெளரவித்து வைத்தனர்.