EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சபைகளைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் கொழும்பில் முக்கிய சந்திப்பு

சபைகளைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் கொழும்பில் முக்கிய சந்திப்பு

வைகாசி 16, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட சகல உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக எதிர்த் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதற்கிடையில் பெயர்ப் பட்டியலை தயாரித்து நிறைவு செய்வதற்கு எதிர்க் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இதுதொடர்பான சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றுள்ளது.

அந்தப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளுக் கான பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடன் நேற்று (15) பேச்சு வார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களில் இந்த ஒன்றிணைந்த கூட்டத்தை அழைக்கும் பொறுப்பு முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இதன்போது பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கும் சகல குழுக்களுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி அமைப்பதற்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இதன்போதே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (15) இடம்பெறவிருந்த கட்சி பொதுச் செயலாளர்களுடனான பேச்சு வார்த்தையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதற்கிடையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் தொகுதியை வெற்றிக்கொண்ட உறுப்பினர்களுடனான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்று தலைமை அலுவலகத்தில் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் நாமல் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு சபைகளிலும் மக்களின் ஆணை எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்பவே செயற்படுவோம். தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இருக்குமாக இருந்தால் அவர்கள் ஆட்சியமைப்பார்கள்.

எதிர்த் தரப்பினருக்கு பெருபான்மை பலம் இருக்கும் சபைகளில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எவ்வாறாக இருந்தாலும் நாங்கள் மக்கள் ஆணைக்கே முதலிடம் கொடுப்போம்.

திரிபுபடுத்தப்பட்ட அரசியல் திட்டத்தில் கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி ஸ்திரமற்ற பிரதேச சபை முறையை அறிமுகப்ப டுத்துவதற்கான பொறுப்பை ஜே.வி.பியே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த முறைக்கமையவே எதிர்க்கட்சியினருக்கும் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.

இந்த முறைக்கமைய எதிர்க்கட்சிக்கான மக்களின் ஆணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் நாங்கள் முக்கியத்துவம் வழங்குவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

2 நாட்கள் முன்னர்
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

5 நாட்கள் முன்னர்
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

7 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In