ஒட்டாவாவில் உள்ள பல இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள், இந்த கோடைகாலத்தில் வேலை தேடுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, மாணவர் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கனடாவின் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் (Statistics Canada) தகவல்படி, மார்ச் மாதம் முழுநேரமாக கல்வி கற்று, வரும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 20.1 சதவீதம் பேர் மே மாதத்தில் வேலையில்லாமல் இருந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் அதிகமாகும்.
கொரோனா தொற்றுநோய் காலங்களைத் தவிர்த்துப் பார்த்தால், 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிக உயர்ந்த மாணவர் வேலையின்மை விகிதம் என கனடாவின் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.











