கிராம உத்தியோகத்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை வழங்காமைக்கு எதிராக கிராம சேவையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட களப்பணிகளை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு வருவதை தவிர்த்துள்ளனர். இதனால் திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர்களிடம் சேவை பெற வருகை தந்த மக்கள் திரும்பி சென்றுள்ளனர்.











