நாட்டில் இன்றையதினம் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மலை நாட்டின் மேட்கு சரிவு பகுதிகளிலும் வட ,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலயத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என குறிப்பிட்டுள்ளனர்.











