EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!

ஆடி 14, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்கும் ’சதித் திட்டம் தொடர்பான வழக்கில் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை (ED) தற்போது உத்தியோகபூர்வமாக விசாரணையில் களமிறங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து பெறப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் அனைத்தும் சென்னை காவல்துறையினரால் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்ட இந்த உத்தேச ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தின் பின்னணியில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறையிலான பாரிய நிதிப் புழக்கம் இருந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை போலீஸ் ஆணையாளர் அமல்ராஜுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பான அத்தனை முக்கிய ஆவணங்களும் அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் இந்தியப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை மிகத் துரிதமாக ஆரம்பித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய புள்ளிகளின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை (Call Data Records) சைபர் க்ரைம் போலீசார் மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில், இந்தச் சதித் திட்டத்துடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் மேலும் நான்கு சந்தேக நபர்களைச் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவர்களில் மதுரையைச் சேர்ந்த கணேசன் மற்றும் ரகு ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ரகசிய இடத்தில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்விவகாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் பின்னணியில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் செயல்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத சுமார் 60 லட்சம் இந்திய ரூபாய் ரொக்கப் பணத்தை உளவுத்துறையினரும் போலீசாரும் பறிமுதல் செய்திருந்தனர்.

இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்பட்டமையால், இதன் பின்னணியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வலையமைப்பு சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே, இந்திய மத்திய அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

செங்கடலின் பாப் எல் – மந்தேப் நீரிணையை முடக்கத் திட்டம்!
உலகம்

செங்கடலின் பாப் எல் – மந்தேப் நீரிணையை முடக்கத் திட்டம்!

ஆடி 14, 2026
காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு
உலகம்

காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

ஆடி 13, 2026
சீனாவில் நிலச்சரிவு – 16 பேர் மாயம்
உலகம்

சீனாவில் நிலச்சரிவு – 16 பேர் மாயம்

ஆடி 7, 2026
வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் – உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு
உலகம்

வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் – உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு

ஆடி 6, 2026
பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 8 பேர் காயம்
உலகம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 8 பேர் காயம்

ஆடி 3, 2026
பாலஸ்தீன அகதிகள் கூடாரம் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
உலகம்

பாலஸ்தீன அகதிகள் கூடாரம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

23 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

1 நாள் முன்னர்
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

6 நாட்கள் முன்னர்
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

4 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In