மொன்றியலின் வில்-மேரி (Ville-Marie) வார்டுக்கு உட்பட்ட டீப் பூங்காவுக்கு (Dieppe Park) அருகிலுள்ள செண்ட். லாரன்ஸ் (St. Lawrence) ஆற்றில்
சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றில் சடலம் மிதப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மொன்றியல் பொலிஸ் பிரிவின் (SPVM) நீர்நிலை ரோந்துப் படையினர் ஆற்றில் சடலத்தைக் கண்டறிந்தனர்.
பின்னர் மொன்றியல் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அச்சடலம் பாதுகாப்பாக ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் விழுந்து மூழ்கிய 36 வயதுடைய கனேடிய நபரினுடையது தான் என்பதை, பொலிஸ் அதிகாரிகள் தற்போது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், இந்த மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக, இந்த வழக்கு தற்போது மரணப் பரிசோதகர் (Coroner) அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.











