ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த தீப்பரவலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து 06 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











