EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆடி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தங்களது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க மீண்டும் இரண்டாவது கட்டமாக ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று (18) 25 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.

​கடந்த 2017.01.31 ம் திகதி பிலவுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பித்த இவர்களின் தொடர் போராட்டம் காரணமாக 2017.02.28 அன்று ஒரு தொகுதி பிலவுக்குடியிருப்பு காணிகள் இலங்கை விமானப்படையின் வசமிருந்து விடுவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2017.03.01 தொடக்கம் கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேற வேண்டும் என கோரி மக்கள் தமது தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு பகுதியில் இராணுவ நுழைவாயிலுக்கு முன்பாக ஆரம்பித்தனர் பல வருடங்களாக இடம்பெற்ற தொடர் போராட்டம் காரணமாக வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் இருந்த காணிகளை இராணுவம் விடுவித்தது.

இருப்பினும் முழுமையாக காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து பல வருடங்களாக போராடிய போது அரச தரப்புக்களினால் உங்களுக்காக காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழிகளோடு இந்த தொடர் போராட்டத்தை மக்கள் 1111 ஆவது நாளில் நிறுத்தினர்.

இதன் பின்னர் இன்று வரை மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை ஆயினும் மக்கள் இது தொடர்பில் ஜனாதிபதி, ஆளுநர், மாவட்ட செயலாளர் என பலரிடமும் பலதடவைகள் தமது காணி விடுவிப்பு தொடர்பாக கோரியும் எந்த தீர்வுமற்ற நிலையில் போராடியே தமது நிலங்களை பெறுவது என்ற அடிப்படையில் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

​பல வருடங்களாகத் தொடரும் இந்த நில உரிமைப் போராட்டத்தில், தங்களின் சொந்தக் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரக் காணிகள் முழுமையாகத் தங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை தங்களின் தார்மீகப் போராட்டம் ஓயாது என்பதை மக்கள் இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தி இன்று (18) 25 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை
அண்மைய செய்திகள்

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

ஆடி 18, 2026
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்
அண்மைய செய்திகள்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

ஆடி 18, 2026
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஆடி 18, 2026
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

ஆடி 18, 2026
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட  சந்திப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு

ஆடி 18, 2026
ஒட்டுசுட்டானில்  வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க
அண்மைய செய்திகள்

ஒட்டுசுட்டானில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க

ஆடி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

விமான நிலையத்தை விஸ்தரிக்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

விமான நிலையத்தை விஸ்தரிக்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

4 நாட்கள் முன்னர்
அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும்  தமிழரசு கட்சி

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசு கட்சி

1 நாள் முன்னர்
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

5 நாட்கள் முன்னர்
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

5 நாட்கள் முன்னர்
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In