EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

ஆடி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்ப்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற 27 வயதுடைய திருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளை திருடிய நபர் சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.

இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு, மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்கிற்கு அருகில் நிறுத்தி Ikman.lk இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று  நடைபெற்றது
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது

ஆடி 20, 2026
ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
அண்மைய செய்திகள்

ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

ஆடி 20, 2026
நாட்டில் டெங்கு  நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 20, 2026
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

ஆடி 20, 2026
உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சுகாதார வசதிகளை  கண்காணிக்க வேண்டும் –  கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சுகாதார வசதிகளை கண்காணிக்க வேண்டும் – கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை

ஆடி 20, 2026
வேலணை பகுதிக்கு  விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

வேலணை பகுதிக்கு விஜயம் செய்த கைத்தொழில் பிரதி அமைச்சர்

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

5 நாட்கள் முன்னர்
அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும்  தமிழரசு கட்சி

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசு கட்சி

3 நாட்கள் முன்னர்
பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In