நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044 ஆகும். இதில் 162 சுகாதார வைத்தியர் அலுவலர் பிரிவுகள் அதிக அபாயம் கொண்ட வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் 8,590 பேரும், ஜூன் மாதத்தில் 21,537 பேரும், ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 20,666 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரைக்கும் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக பதிவாகியுள்ளதுடன், இறப்பு விகிதம் 0.07 என தெரிவித்துள்ளனர்.











