மஸ்கெலியா நகரில் உள்ள மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு பெரியவர்களும், இரண்டு குழந்தைகளும் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பெரியவர்கள் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்ததில் வீதியைவிட்டு முச்சக்கரவண்டி விலகியதால் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.











