EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வல்வெட்டித்துறையில் சிலை திறப்புக்கு இடைக்கால தடை உத்தரவு

வல்வெட்டித்துறையில் சிலை திறப்புக்கு இடைக்கால தடை உத்தரவு

ஆடி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரையில் இடைக்கால தடை விதித்துள்ளது.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் திறப்பதனால் , பொது தொல்லை ஏற்படும் என , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, சிலை திறப்பு விழா தொடர்பில் தாம் மேலதிக புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி இருப்பதாகவும் , சிலை தொடர்பில் சட்டமா அதிபரிடமும் ஆலோசனை பெற வேண்டி இருப்பதாகவும் , அதனால் சிலையை திறக்க அனுமதிக்க கூடாது என மன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அதேவேளை சிலை திறப்பு விழாவின் ஏற்பாட்டு குழு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , சிலை திறப்பு விழா பொது தொல்லையை ஏற்படுத்துவது இல்லை. சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அவர்களின் சிலையை திறக்கவுள்ளோம்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் எந்தவொரு முறைப்பாடும் இல்லாத நிலையில் பொலிஸார் தாமாக பொது தொல்லையை ஏற்படுத்துவதட்காக வழக்கு தொடர்ந்துள்ளனர் என சமர்ப்பணம் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மன்று சிலையை திறந்த பின்னர் , அகற்ற வேண்டியோ , உடைக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது பொருத்தமில்லை என்பதால், சிலையை திறக்க முதல் ஆராய்வதே பொருத்தமானது என மன்று கருதுவதாக குறிப்பிட்டு , சிலை திறப்பு விழாவிற்கு இடைக்கால தடை விதிப்பதாக கட்டளையிட்டு, குறித்த வழக்கினை எதிர்வரும் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளவுள்ளதாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்

ஆடி 22, 2026
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு
அண்மைய செய்திகள்

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

ஆடி 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி
அண்மைய செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

ஆடி 22, 2026
தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு
அண்மைய செய்திகள்

தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

ஆடி 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்
அண்மைய செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

ஆடி 22, 2026
செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

ஆடி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

7 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

2 நாட்கள் முன்னர்
மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

5 நாட்கள் முன்னர்
நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை: கனேடிய பொலிஸ் (RCMP) அதிரடி அறிவிப்பு!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In