பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) மன்னார் கிளை வளாகமானது இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் ஆலய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை கடந்த 14 வருடங்களாக மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த நிலையில் தற்போது அதியுயர் வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி அசங்க பண்டார தென்னகோன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வமத தலைவர்கள் ஆசியுடன் குறித்த வங்கி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.











