EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஆடி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று (27) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை “சட்டத்தை மதிக்கும் நேர்மையான அரச சேவை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரச சேவையில் நேர்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களை பேணுவதற்கும், பொதுமக்களுக்கு திறமையானதும் நியாயமானதுமான சேவையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய நேர்மை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குதல், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தேசிய நேர்மை வாரம் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகிறது.

தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களில் நேர்மைக் கலாசாரத்தை மேம்படுத்தல், நிதி மற்றும் டிஜிட்டல் செயற்பாடுகளில் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல், சமூக மற்றும் தார்மீக விழுமியங்களை மேம்படுத்துதல், சிறந்த சேவை வழங்கலை உறுதிப்படுத்துதல் மற்றும் வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!
அண்மைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
அண்மைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

ஆடி 27, 2026
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

ஆடி 27, 2026
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்
அண்மைய செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஆடி 27, 2026
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்
அண்மைய செய்திகள்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

4 நாட்கள் முன்னர்
யாழ். விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ். விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா

1 நாள் முன்னர்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

5 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In