EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆவணி 11, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC), JSSC மற்றும் CGL மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் கடுமையான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த எதிர்ப்பின் உச்சமாக, மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கிய வேளையில் மாணவர்கள் பேரணியாகச் சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். காவல்துறையினர் அமைத்திருந்த பல அடுக்கு பாதுகாப்புத் தடுப்புகளை மீறி முன்னேற முனைந்த போராட்டக்காரர்களைக் கலைக்க, காவல்துறை அதிரடியாகத் தடியடி நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.

மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடும் மாணவர்களின் குரலை ஒடுக்குவது தவறானது என்று சுட்டிக்காட்டிய அவர், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு மாணவர்களின் குறைகளை உடனடியாகக் கேட்டறிந்து நியாயமான தீர்வைக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தேர்வாணைய முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி தலைமையில் பாஜக தொண்டர்கள் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் அவர்களை அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சட்டமன்றத்திலும் இதுகுறித்து கடுமையான அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. ஆளுங்கட்சியான ஜே.எம்.எம் தரப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சுதிவ்யா குமார், மாணவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் சூழலில், மாணவர் போராட்டத்தை பாஜக சுயநல அரசியல் காரணங்களுக்காகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தவறாக வழிகாட்டி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மாணவர்களின் போராட்டமும் அதற்கு எதிரான அரசியல் கொந்தளிப்பும் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆவணி 11, 2026
விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 11, 2026
109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு  இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்
உலகம்

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஆவணி 11, 2026
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி
உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆவணி 11, 2026
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்
உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

21 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

20 மணத்தியாலங்கள் முன்னர்
சிறுவனுக்கு  அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார  பணித்தடை

சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

6 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

19 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In