EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு  இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

ஆவணி 11, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜும்மா லால் ருத்தியா என்பவர், முதலாம் உலகப் போரின் போது செலவுகளுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடனாக வழங்கிய ரூ.35,000 தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கோரி அவரது பேரன்கள் இங்கிலாந்து அரசிடம் முறையிட்டுள்ளனர்.

1917-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி போபாலில் இருந்த பிரிட்டிஷ் அரசியல் முகவரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட இந்தக் கடனுக்கான 109 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் பதிவேடுகளில் கண்டெடுக்கப்பட்டுத் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. போபால் மாநிலத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், போர்க் காலத்தில் ராணுவ வீரர்களின் தேவைகளுக்காகவும் பிரிட்டிஷ் பேரரசு இந்த நிதியைப் பெற்றதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செஹோர் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் பேரன்களான வினய் ருத்தியா மற்றும் விவேக் ருத்தியா ஆகியோர் தங்களது சட்ட ஆலோசகர் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு (UK Debt Management Office) முறைப்படி சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பினர். 1937-இல் காலமான தங்களது தாத்தா வழங்கிய கடன் தொகையின் தற்போதைய மதிப்பு, ஒரு நூற்றாண்டு கால வட்டியையும் சேர்த்து பல கோடி ரூபாயைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், சர்வதேச சட்ட விதிகளின்படி ஒரு இறையாண்மை கொண்ட நாடு தனது பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மனுவைப் பரிசீலித்த இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகம், அக்கோரிக்கையை ஆய்வு செய்ய அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டு பதிலளித்துள்ளது.

அதில், உரிமை கோரப்படாத பணம் கிடைக்க உரிமை இருப்பதாகக் கருதினால், சொத்துப் பங்கீடு தொடர்பான ஆதாரங்கள், சான்றிதழ்கள் மற்றும் பழமையான கடிதப் போக்குவரத்தின் நகல்களை அரசுப் பத்திரப் பதிவாளரான ‘கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ்’ (Computershare Investor Services PLC) நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரிட்டிஷ் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்கடனைத் திரும்பக் கேட்கும் இந்தியக் குடும்பத்தின் இந்த முயற்சி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆவணி 11, 2026
விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஆவணி 11, 2026
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி
உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆவணி 11, 2026
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்
உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

4 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

3 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான  அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

4 நாட்கள் முன்னர்
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In