EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

ஆவணி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது முன்னெடுக்கப்பட்டு வரும் மின் தடை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் மக்களின் பிரச்சினை குறித்து மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை (5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பாதிக்கப்படுவதுடன் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் செயலிழப்பதுடன் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஆண்டு ஐந்து மற்றும் கா பொ த உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அத்துடன் சட்ட விரோத நடவடிக்கைக்கும் சாதகமாக அமைந்து விடுகிறது.ஒவ்வொரு நாளும் பல தடவைகள் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

அரசியல் வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் உறக்கத்தில் உள்ளனர்.மக்கள் நிலை பற்றி அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மன்னார் மக்களின் விருப்பமின்றி அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையால் அமைக்கப்பட்ட 40 காற்றாலைகளில் தினமும் பல மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுகிறீர்கள்.ஆனால் மன்னார் மக்களை வேண்டுமென்றே வஞ்சிக்கிறது மின்சார சபை.

தடையற்ற மின்சாரம் தருவோம் என உத்தரவாதம் அளித்த அரசாங்கம் மின் தடையை ஏற்படுத்துகிறது. பல அமைச்சர்கள் மன்னாருக்கு வருகை தந்து மக்களுக்கு ஏமாற்று கதைகள் கூறிவிட்டு போகிறார்களே தவிர இந்த மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை.

வட கிழக்கிற்கு வெளியே இவ்வாறு ஏமாற்று வேலையை மின்சார சபையால் செயல்படுத்த முடியுமா? அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் எமது மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.பல மாதங்களாக ஜனநாயக ரீதியாக போராடிய எமது மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசும் மின்சார சபையும் இப்பொழுது மன்னார் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவே நாம் உணர்கிறோம்.

எம்மிடமிருந்து வருமானம் பெறும் தாங்கள் எமது மக்களுக்கு போதிய மின்சார கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் ஆகும்.அந்தப் பொறுப்பில் இருந்து மின்சார சபை விலகுவது வேதனைக்குரிய விடயம் .

ஆகவே உடனடியாக மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தினமும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் .இல்லையேல் இழப்பீடு கோரி நீதிமன்றம் நாட வேண்டி வரும்.

தொடர்ந்து மன்னார் மக்களை வஞ்சிப்பது அரசு நிர்வாகத்தின் இயலாமை.

உடனடியாக மின் தடையை நிவர்த்தி செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

ஆவணி 5, 2026
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
அண்மைய செய்திகள்

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது – 18ஆம் திகதி வரை விளக்கமறியல்.

ஆவணி 5, 2026
மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்
அண்மைய செய்திகள்

மன்னாரில் கடல் அட்டைகளுடன் கைதான இருவர்

ஆவணி 5, 2026
நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
அண்மைய செய்திகள்

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

ஆவணி 5, 2026
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்

5 நாட்கள் முன்னர்
நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

2 நாட்கள் முன்னர்
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

2 நாட்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை  சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In