கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணிகளை ஏற்றிச் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 1.30 மணிக்கு பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியில் வீதி வேக கட்டுப்பர்டை மீறி வீதியைவிட்டு விலகி எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற வரும், அதில் பயணித்த பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரேமே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பிரதான பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











