‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வாரத்தின் அறிமுக நிகழ்வு, இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதான நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கலந்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சிவகுருநாதன் திருவாகரன் நேர்மையான சேவை தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











