EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

ஆவணி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாண சுகாதார அமைப்பான ‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) மீது கியூபெக் நகரைத் தளமாகக் கொண்ட ‘சொல்யூஷன்ஸ் பெட்டல் இன்வெஸ்டிகேஷன்ஸ்’ (Solutions Petal Inc.) என்ற மென்பொருள் நிறுவனம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

தனது நோயாளி நேர ஒதுக்கீடு மற்றும் அட்டவணை மேலாண்மை மென்பொருளை ‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) அமைப்பு போலியாக நகலெடுத்துப் பயன்படுத்தியதாகக் கூறியே, இந்த வழக்கினை அந்த மென்பொருள் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. 125 மில்லியன் முதல் 175 மில்லியன் கனேடிய டொலர் வரை இந்த இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

ரகசியக்காப்பு ஒப்பந்தத்தை மீறி, தங்களது பிரத்யேகத் தொழில்நுட்பத் திட்டத்தின் மூலக் குறியீட்டை (Source Code) மறுஉருவாக்கம் செய்து போலி மென்பொருளை உருவாக்கியதாக, சாந்தே கியூபெக் மற்றும் மாகாண சுகாதார அமைச்சு மீது பெட்டல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், தற்போதைய போலி மென்பொருளின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த இடைக்காலத் தடையும் கோரப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களின்படி, பெட்டல் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் ‘எல் ஓர்கெஸ்ட்ரேட்டர்’ (L’Orchestrateur) என்ற நோயாளி முன்பதிவு மென்பொருளை, சாந்தே கியூபெக்கிற்கு முதன்முதலில் வழங்கியது.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் கியூபெக் சுகாதார அமைச்சு இம்மென்பொருளைப் பயன்படுத்தும் காலவரையற்ற உரிமையைப்
பெற்றது. எனினும், அசல் அமைப்பைத் தவிர்த்துப் புதிய அமைப்பை உருவாக்கும் நோக்கில், பெட்டல் நிறுவனத்தின் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்யுமாறு சாந்தே கியூபெக் கோரியுள்ளது.

பின்னர், அதே தொழில்நுட்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய மூலக் குறியீட்டை உருவாக்கப் பகிரங்க ஏலக் கோரலை (Call for Tenders) வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளாகப் பெறப்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி தங்களது வர்த்தக ரகசியங்களை வணிகப் போட்டியாளர்களுக்குச் சாந்தே கியூபெக் வெளிப்படுத்தியதாக, பெட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பட்ரிஸ் கில்பர்ட் (Patrice Gilbert) தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாண சுகாதார அமைப்பான சாந்தே கியூபெக் அமைப்பு, இக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி
அண்மைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

ஆவணி 4, 2026
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஆவணி 4, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

ஆவணி 4, 2026
வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி
அண்மைய செய்திகள்

வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

ஆவணி 4, 2026
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 4, 2026
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

4 நாட்கள் முன்னர்
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

1 நாள் முன்னர்
இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

7 நாட்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை  சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In