வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சாரதியின் அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரியவந்தது.
காலாவதியான சாரதி அனுமதி பத்திரம் உள்ள ஒருவருக்கு பேருந்தை செலுத்துவதற்கு அனுமதித்தமை தொடர்பில் குறித்த பிரபல பேருந்து சேவையின் உரிமையாளர் இன்று புளியங்குளம் பொலிஸுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











