மொன்றியல் பெருநகரப் பகுதியிலுள்ள செயிண்ட்-லாரன்ட் (Saint-Laurent) போரா பகுதியில், நடைவண்டியில் (Stroller) தாயாரால் தள்ளிச் செல்லப்பட்ட 16 மாதக் குழந்தை மீது கார் ஒன்று மோதியதில், அக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, மாலை 5:20 மணியளவில் செயிண்ட்-லாரன்ட் பகுதியில் அமைந்துள்ள டெக்காரி பூலேவார்ட் (Décarie Blvd.) மற்றும் தியொடோர்-ரோபிடைல் வீதி (Théodore-Robitaille St.) சந்திப்பில் இப் விபத்து இடம்பெற்றுள்ளது.
குழந்தையைத் தள்ளிச் சென்ற தாயார் எவ்விதக் காயங்களுமின்றித் தப்பியுள்ள போதிலும், பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேவேளை, காரைச் செலுத்திய 40 வயதுடைய பெண் ஓட்டுநருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அத்துடன், அவர் சம்பவ இடத்தில் பொலிஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
முதற்கட்ட விசாரணைகளில், அந்தப் பெண் ஓட்டுநர் மதுபானமோ அல்லது போதைப்பொருளோ உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தை, ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மொன்றியல் பொலிஸ் பிரிவு (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து குறித்த துல்லியமான தகவல்களைப் திரட்டுவதற்காக மொன்றியல் பொலிஸ் பிரிவின் விபத்து மறுசீரமைப்பு நிபுணர்கள் (Collision
reconstruction specialists) சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.











