சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் சமிபாட்டு ஒழுங்கின்மை அல்லது வயிற்றில் உள்ள சமிபாட்டுச் சாறுகள் நீர்த்துப்போகும் என்பது பொதுவாக சொல்லப்படும் ஒரு கருத்து. ஆனால் உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது பொதுவாக சமிபாட்டை பாதிக்காது ,மாறாக உணவை உடைக்கவும், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் தண்ணீர் உதவுகிறது.
ஆனால் ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது சிலருக்கு வயிறு நிறைந்தது போன்ற உணர்வு அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக உணவுக்குப் பிறகு உடனடியாக அதிகமாக குடிப்பதைவிட, தேவையான அளவு சிறிது சிறிதாக குடிப்பது உகந்ததாக இருக்கும்.











