துப்பாக்கி ஏந்திய அந்த கொடூரனின் வன்முறை வெறியாட்டத்தை, காவல்துறை அதிகாரி முகமது லமின் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane) உயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்தியுள்ளதாக, மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) தெரிவித்துள்ளார்.
முகமது லமின் பென்ரெடோவான் அவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் இன்று இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டிருக்கும் என, அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) முகமதுவின் மூன்று வயது மகனிடமும், இன்னும் பிறக்காத அவரது இரண்டாவது குழந்தையிடமும் அவர்களின் தந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காகக் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரியுள்ளார். மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரி முகமது லமின் பென்ரெடோவானின் உத்தியோகபூர்வ பொது அஞ்சலி மற்றும் நினைவு ஊர்வல நிகழ்வுகள் மொன்றியல் நகரின் மையப்பகுதியில் உணர்ச்சிப்பூர்வமாக இடம்பெற்றன.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சர் (Premier) கிறிஸ்டின் ஃபிரெச்செட் (Christine Fréchette) மற்றும் மொன்றியல் நகரத்தின் மேயர் சொரையா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) ஆகியோரும் கலந்துகொண்டு தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர். “இன்று ஒட்டுமொத்த கியூபெக் மாகாணமும் ஒரு மாவீரனுக்காக அழுகிறது” என்று, கியூபெக்கின் முதல்வர் கிறிஸ்டின் ஃபிரெச்செட் (Christine Fréchette) தமaது உரையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.











