EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று

பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று

ஆடி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையிலையே , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் , நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி, தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக், பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அவதூறான பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.

அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட மன்று , எதிர் மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.
அண்மைய செய்திகள்

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

ஆடி 14, 2026
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!
அண்மைய செய்திகள்

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

ஆடி 14, 2026
கிளிநொச்சியில்  34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் 34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு

ஆடி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

6 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

6 நாட்கள் முன்னர்
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

2 மணத்தியாலங்கள் முன்னர்
மொண்ட்ரியல் கிழக்கில் கொக்கெய்ன் விநியோக வலையமைப்பு காவல்துறையால் முறியடிப்பு

மொண்ட்ரியல் கிழக்கில் கொக்கெய்ன் விநியோக வலையமைப்பு காவல்துறையால் முறியடிப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In