EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆடி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் ஆங்கில மொழிச் சிறுவர் பாதுகாப்புச் சேவைகளை வழங்கிவரும் ‘பட்ஷா சிறுவர் மற்றும் குடும்ப நிலையத்தின்’ (Batshaw Youth and Family Centres) பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் இருந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொன்றியல் நகரில் இயங்கும் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சிறுவர் பாதுகாப்புத் துறையில் நிலவும் தீவிரப் பணியாளர் பற்றாக்குறை மற்றும் அலட்சியப் போக்கிற்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் கியூபெக் சொலிடேர் (Québec Solidaire) அரசியல் கட்சியும் ஊழியர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

உயிரிழந்த மூன்று சிறுவர்களில் இருவர், தங்களது வீடுகளுக்குச் சமூகப் பணியாளர்கள் வருகை தந்து தங்களைக் கண்காணிப்பதற்கான
அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்திற்காகக் காத்திருந்த வேளையிலேயே உயிரிழந்துள்ளனர். மூன்றாவது சிறுவன், பிரீவோஸ்ட் (Prévost) பகுதியில் ‘பட்ஷா’ நிறுவனத்தால் நேரடியாக நிர்வாகிக்கப்பட்டு வந்த சிறுவர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்தபோது, தவறான முடிவை மேற்கொண்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளான்.

ஒரே மாதத்தில் இடம்பெற்ற இந்த மூன்று மரணங்களும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள கியூபெக் சொலிடேர் கட்சி மற்றும் சிறுவர் பாதுகாப்பு ஊழியர் சங்கங்கள், “யாரும்
இந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளன.

சிறுவர் பாதுகாப்புப் பிரிவில் நிலவும் காலதாமதங்கள், ஊழியர்களுக்கான பணிச்சுமை மற்றும் போதுமான கண்காணிப்பின்மை ஆகியவையே இத்தகைய துயரச் சம்பவங்களுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினர், இது குறித்துச் சுதந்திரமான மரண விசாரணை (Coroner Inquest) மற்றும் முறைசார் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பதிலளித்துள்ள 'பட்ஷா' மையத்தை நிர்வகிக்கும் ‘CIUSSS de l’Ouest-de-l’Île-de-Montréal’ சுகாதார அமைப்பு, தனிப்பட்ட நபர்களின் ரகசியத்தன்மை மற்றும் குடும்பங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட வழக்குகள் குறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் திறந்து வைக்கப்பட்ட புதிய மணிக்கோபுரம்

ஆடி 25, 2026
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை
அண்மைய செய்திகள்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை

ஆடி 25, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

ஆடி 25, 2026
யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்
அண்மைய செய்திகள்

யாழில். 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர்

ஆடி 25, 2026
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை
அண்மைய செய்திகள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

ஆடி 25, 2026
யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி
அண்மைய செய்திகள்

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி

ஆடி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

4 நாட்கள் முன்னர்
பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கியை  அகற்றிய பொலிஸார்

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கியை அகற்றிய பொலிஸார்

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

2 நாட்கள் முன்னர்
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை  தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

4 நாட்கள் முன்னர்
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In