காலை எழுந்த பிறகும் போதிய தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு, பகலில் சிறிது ஓய்வு கிடைத்தாலும் கண்கள் சொருகுதல், வேலை செய்யும்போதோ அல்லது வாகனம் ஓட்டும்போதோ திடீரென தூக்கம் வருவது போன்ற பாதிப்புகளைப் பலர் எதிர்கொள்கின்றனர்.
இதனை வெறும் ‘சோர்வு’ அல்லது ‘சோம்பேறித்தனம்’ என்று அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், இதன் பின்னணியில் தீவிர உடல்நலக் கோளாறுகள் இருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவ உலகில் இது அதிகப்படியான பகல் நேர தூக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பகலில் அதிக தூக்கம் வருவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருப்பதில்லை. பல உடல் மற்றும் மனநலக் காரணிகள் இதற்குக் காரணமாக அமைகின்றன.
அதுமட்டுமன்றி இரவில் போதிய நேரமோ அல்லது ஆழமான தூக்கமோ கிடைக்காததே முதன்மைக் காரணம்.
தாமதமாக உறங்குவது, இரவு நேரத்தில் அதிக நேரம் மொபைல் அல்லது கணினித் திரைகளைப் பார்ப்பது மற்றும் மாறி மாறி வேலை செய்யும் ஷிப்ட் முறைகள் உடலின் இயற்கை தூக்கச் சுழற்சியைப் பாதிக்கின்றன.
அதுமட்டுமன்றி அதிக மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு என்பனவும் காரணமாக அமைகின்றது.
இதனால் ஏற்படும் ஆபத்துகள்
தொடர்ந்து பகல் நேரத்தில் தூக்கம் வருவது அன்றாட வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றக்கூடும்.
இது பணியிடத்தில் வேலைத்திறனைக் குறைப்பதோடு, தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
எல்லாவற்றையும் விட ஆபத்தானது, வாகனம் ஓட்டும்போது ஏற்படும் தூக்கக் கலக்கம் பெரிய அளவிலான வீதி விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
நீண்ட கால அளவில் இது மனநலத்தைப் பாதிப்பதோடு, நாற்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் உயர்த்துகின்றது.
எனவே, பகலில் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத தூக்கம் இருந்தால், அதை அலட்சியம் செய்யாமல் அது சாதாரண சோர்வா அல்லது தூக்கக் கோளாறா என்பதைக் கண்டறிய தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்











