மின்தடை நீங்கியவுடன் AC அல்லது குளிர்சாதனப் பெட்டியை உடனடியாக இயக்குவது, அதன் Compressor க்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி கோளாறு உண்டாக்கும் அபாயம் இருப்பதாக மின் சாதன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மின் அழுத்தம் முழுமையாக சீராகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.
மின்சாரம் திரும்பிய பின் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை இயக்குவது பாதுகாப்பானது. இதனால் Compressor இன் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், திடீர் பழுது ஏற்படும் அபாயமும் குறையும்.
அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் Surge Protector அல்லது தரமான Voltage stabilizer பயன்படுத்துவது ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும் பழுதுகளைத் தவிர்க்க உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.











