பொரளை மகசின் சிறைச்சாலையில் இன்று திடீரென பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்புப் படைகளும் உடனடியாக உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் (STF) உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகள் விரைவாக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சிறைக்குள் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த பதற்ற நிலைமை உருவாகக் காரணமான சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











