EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை  தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

ஆடி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு, மற்றும் புங்குடுதீவு கடற்தொழிலாளர்களின் வலைகளை அறுத்து நாசமாகியுள்ளனர்.

இதனால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளமையால், எமது தொழிலாளர்கள் பல இலட்சம் நஷ்டமடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அந்த வலைகளை வேண்டி தொழில் செய்வதற்கு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

வலைகளை இழந்த தொழிலாளிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்க கூட எவரும் இல்லை. யாரை குறை சொல்வது யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாத நிலையில், அநாதரவாக தொழிலாளிகள் நிற்கின்றனர்.

எங்கள் நாட்டு அரசாங்கத்திடம் கடற்தொழில் அமைச்சர் ஊடாக தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி வருகிறோம். கடற்படையினர் முழுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதேநேரம், தமிழக முதலமைச்சர் விஜயிடமும் தயவான வேண்டுகோளை முன் வைக்கிறோம். காரைக்கால், புதுக்கோட்டை , இராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்களை எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்துங்கள். அவர்களால் எங்கள் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகிறது.

தொப்புள் கொடி உறவுகள் என கூறிக்கொள்ளும் இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சனைகள், முரண்பாடுகள் வராது தடுத்து நிறுத்துங்கள்

இரு நாட்டு அரசாங்கமும் மீனவர் பிரச்சனையை பேசி தீர்வினை பெற வேண்டும். தமிழக அரசும் , இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்
அண்மைய செய்திகள்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

ஆடி 21, 2026
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆடி 21, 2026
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அண்மைய செய்திகள்

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஆடி 21, 2026
எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஆடி 21, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

ஆடி 21, 2026
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

4 நாட்கள் முன்னர்
“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

18 மணத்தியாலங்கள் முன்னர்
கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In