கியூபெக்கில் சட்டத்தரணி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஷேக் அகமது திஜானே நதியாயே (Cheikh Ahmed Tidiane Ndiaye) என்பவருக்கு, இடைநிலை இல்லத்தில் (Halfway house) தங்குவதற்கு நாட்டின் பரோல் சபை (Parole Board of Canada) அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சிவில் சட்டத்தரணி நிகோலஸ் டோடெலின் (Nicholas Daudelin) என்பவரது வீட்டின் கதவு வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில், 44 வயதான நதியாயேவுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தண்டனைக் காலத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பிணைக் கோரிக்கையை ஆய்வு செய்த பரோல் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
நதியாயேவுக்கு முழுமையான பரோல் (Full parole) வழங்க மறுப்பு தெரிவித்துள்ள பரோல் சபை, அவர் சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கு ஏதுவாக ஆறு மாத காலத்திற்கு இடைநிலை இல்லத்தில் தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
சிறைவாசத்தின் போது நதியாயே தனது நடத்தையில் மாற்றத்தைக் காட்டியுள்ளதாகவும், வன்முறை அபாயம் குறைந்துள்ளதாகவும் மதிப்பிட்டுள்ள பரோல் சபை, இருப்பினும் சட்ட அமைப்பின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்த விடுதலையை வழங்கியுள்ளது.











