மொன்றியல் பெருநகரப் போக்குவரத்து அமைப்பான ‘எஸ்.டி.எம்’ (STM), எதிர்வரும் 2031 ஆம் ஆண்டு முதல் தனது மெட்ரோ ரயில் சேவையின் பசுமை வழித்தடத்தில் பழமையான ‘எம்.ஆர்-73’ (MR-73) ரயில்களையே முழுமையாகப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
நீல வழித்தடத்தின் விரிவாக்கப் பணிகள் 2031 ஆம் ஆண்டில் நிறைவடையும் போது, அங்குள்ள புதிய கட்டுப்பாட்டு அமைப்புடன் இந்த பழைய ரயில்கள் இணக்கமாக இயங்க முடியாது என்பதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘ப்ளூ லைன்’ நீல வழித்தடத்தில் இயக்கப்படும் பழமையான ‘எம்.ஆர்-73’ ரயில்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக, பசுமை வழித்தடப் பாதையில் சேவையில் உள்ள நவீன 'அசூர்' (AZUR) ரயில்கள் அப் பாதைக்கு மாற்றப்படவுள்ளன.
1976 ஆம் ஆண்டு மொன்றியல் ஒலிம்பிக் போட்டியின் போது, முதன்முதலாகச் சேவையில் இணைக்கப்பட்ட ‘எம்.ஆர்-73’ ரயில்கள், 2031ஆம் ஆண்டளவில் சுமார் 55 ஆண்டுகள் பழமையானவையாகி விடும் நிலை உள்ளது.
இவை தங்களின் வழக்கமான 40 ஆண்டு ஆயுட்காலத்தை விட 15 ஆண்டுகள் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.











