EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழகம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

தமிழகம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தம்.

ஆனி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கடலுக்கு மீன் பிடிக்க சென்று நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழகத்தின் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி இரவு மண்டபம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரசாந்த், ஹனிபா, கலீல் ரகுமான், பரகத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் மண்டபம் துறைமுகத்திலிருந்து சுமார் 8 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகின் அடிபகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதில் பிரசாந்த் மற்றும் ஹனீப்பா ஆகிய இருவரும் உயிருடன் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் பரக்கத்துல்லா மற்றும் ஆரோக்கியம் இருவரும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் கலீல் ரகுமான் என்ற மீனவர் காணாமல் போய் தற்போது வரை கிடைக்காததால் தொடர்ந்து மரைன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவ சங்கம் சார்பில் நேற்று கோயில்வாடி கடற்கரையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர்.

அக்கூட்டத்தில் இறந்த மூன்று மீனவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதுடன், மூன்று மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்று மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதனிடையே தமிழக அரசால் வழங்கப்பட்ட இரண்டு லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் இறந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி காசோலையை வழங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மலையேறி
உலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மலையேறி

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

16 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

15 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

16 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In