கனடாவில் யோர்க் பிராந்தியத்தின் கஸ்விக் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் அதிகாலை வேலையில் இடம்பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு வரும்வேளை இருவர் காயமடைந்த நிலையில்இருந்ததாகவும் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் எனவும் இந்த துப்பாக்கிச் சூட்டினால் பொது மக்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் எந்த ஒரு நபரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











