EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவிலிருந்து  இறக்குமதியாகும்  பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் –  அமெரிக்க அதிபர்

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஆடி 21, 2026
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மதுபானங்கள், சிமெந்து, தளபாடங்கள், ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை  விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராகக் கனடா முன்னெடுத்து வரும் “பாகுபாடான நடவடிக்கைகளுக்கு” பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய வரி அறிவிப்பு, கியூபெக் மாகாணப் பொருளாதார தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1930 ஆம் ஆண்டின் அமெரிக்க வரிச் சட்டத்தின் பிரிவு 338-ன் கீழ், இந்த அபராத வரிகள் விதிக்கப்படவுள்ளன.

அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு எதிராக இச்சட்டப் பிரிவைப் பயன்படுத்தி 50 சதவீத வரி விதிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை, ஆற்றல் (Energy), பொட்டாஷ் (Potash), மீன் வளம், முக்கிய கனிமங்கள் மற்றும் ஏற்கனவே பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம் மற்றும் வாகன உற்பத்திகளுக்கு இப் புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க அதிபரின் இந்த புதிய வரி அச்சுறுத்தலுக்கு கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் (Christine Fréchette) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வரிவிதிப்பினைக் காரணம் காட்டி, கியூபெக்கின் பால் பண்ணை முகாமைத்துவ அமைப்பில் எந்தவொரு தளர்வையும் ஏற்படுத்த முடியாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த கியூபெக் மாகாண முதல்வர், இந்த விவகாரம் குறித்துக் பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) நடைபெறவுள்ள மாகாண முதல்வர்களின் கூட்டத்தில் நேரில் உரையாடள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு
கியூபெக்

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையைப்  கனேடிய மாகாணங்களே  பூர்த்தி செய்கின்றன –   பீட் ஹோக்ஸ்ட்ரா
கனடா

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவையைப் கனேடிய மாகாணங்களே பூர்த்தி செய்கின்றன – பீட் ஹோக்ஸ்ட்ரா

ஆடி 21, 2026
அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக்  கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மார்க் கார்னி
கனடா

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மார்க் கார்னி

ஆடி 21, 2026
“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

3 மணத்தியாலங்கள் முன்னர்
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

18 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

1 நாள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

56 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In