அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள டைகோன்டெரோகா (Ticonderoga) நகரில் கடந்த ஆண்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட மொன்றியல் நகரத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் (Melina Frattolin) நினைவைப் போற்றும் வகையில், அப்பகுதியில் புதிய வீதிப் பெயர்ப்பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
சிறுமியின் தந்தை மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள சூழலில், உள்ளூர்வாசிகளின் முயற்சியால் இந்த நினைவுப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நியூயோர்க் மாநிலத்தின் ‘ரூட் 74’ (Route 74) நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மூன்று கிலோமீட்டர் தூரப் பகுதியின் இரு முனைகளிலும், “மெலினா ஃபிராட்டோலினின் நண்பர்கள்” (Friends of Melina Frattolin) எனும் மஞ்சள் நிற எழுத்துக்களுடன் கூடிய எதிரொளிக்கும் (reflective)பலகைகள் நாட்டப்பட்டுள்ளன.
சுமார் 5,000 மக்கள் மட்டுமே வாழும் அமைதியான டைகோன்டெரோகா நகரை உலுக்கிய இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறுமியின் நினைவைப் நிரந்தரமாகப் பாதுகாக்கும் நோக்கில் ‘பிரிகெட் குரூஸ்’ (Bridgette Cruz) என்ற உள்ளூர் தாய் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











