இலங்கையின் மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையின் வளாகத்தினுள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











