மன்னார் இழுப்புக்கடவாய் அந்தோனிபுரம் கடற்கரை பகுதியில் வைத்து சுமார் 4,900 கடல் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைதானவர்கள் 33 மற்றும் 39 வயதுடையவர்கள் என்பதுடன், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகு மற்றும் ஏனைய உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.











