கியூபெக் (Quebec) மாகாணத்திலுள்ள மிராபெல் (Mirabel) பகுதியில் அமைந்துள்ள ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை
மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டராகக் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த நெடுஞ்சாலையில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, இந்த முடிவினை போக்குவரத்து அமைச்சு
மேற்கொண்டுள்ளது. குறித்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணிக்கக்கூடிய வேக எல்லையானது தற்போது, மணித்தியாலத்துக்கு 80 கிலோமீட்டராக உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இப்பகுதியில் நான்கு பேர் விபத்துகளால் உயிரிழந்துள்ள நிலையில், தற்காலிகமாக வேக எல்லையை
மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டராகக் குறைப்பது மாத்திரம் போதாது எனவும், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிரந்தரமான மாற்று வழிகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வீதியின் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி சில்வி லெஃபெவ்ரே (Sylvie Lefebvre) என்ற உள்ளூர்வாசியால் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட
இணையவழி மனுவில் (Petition), 2,300 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
மிராபெல் நகர மேயர் ரொக்ஸான் தெரியன் (Roxanne Therrien) இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டு முதல் தாங்கள் இந்த
வீதியின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி வருவதாகக் குறிப்பிட்டார். “விபத்துகள் நடந்த பின்னர் அதற்குப் பதிலளிப்பதை நிறுத்திவிட்டு,
எதிர்காலத்தில் இத்தகைய சோகங்கள் நடக்காமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, மிராபெல் நகர மேயர் ரொக்ஸான் தெரியன் (Roxanne Therrien) கூறியுள்ளார்.










