இவ்வாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் 9 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்
இந்நிலையில் நாடு முழுவதும் 2723 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 294,089 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீடசை திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, குறித்த பரீட்சசைக்கான மேலதிக வகுப்புக்கள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.











