EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
காங்கேசன்துறையில்  வெற்றுக்காணிக்குள் பரவிய  திடீர் தீ

Screenshot

காங்கேசன்துறையில் வெற்றுக்காணிக்குள் பரவிய திடீர் தீ

ஆடி 27, 2026
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர், பெற்றோலியத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் , அந்த காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்படுகிறது.

இது தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் , அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்ட போதும் , பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும் பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

அதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை பதாகைகளை காட்சிப்படுத்துமாறு, பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவித்த போதும் , அது தொடர்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்புமாறு கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த எரிபொருள் களஞ்சிய சாலை அப்பகுதியில் நிறுவப்படும் போது , அதனை சூழவுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படும் எனவும், தீ விபத்துக்கள் ஏற்படாதவாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் எரிபொருள் களஞ்சிய சாலையை சுற்றி கம்பி வேலிகள் மாத்திரமே காணப்படுவதுடன் , இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்ட வெற்றுக்காணிக்கு அருகில் தான் எரிபொருள் தாங்கிகள் காணப்படுவதாகும் , தீ பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே குறித்த எரிபொருள் களஞ்சிய சாலையை சூழ பாரிய மதில்களை கட்டி , அதனை பாதுகாப்பான களஞ்சிய சாலையாக மாற்றுமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அயலவர்களால் , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தரசாவின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில் , தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
அண்மைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

ஆடி 27, 2026
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

ஆடி 27, 2026
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஆடி 27, 2026
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்
அண்மைய செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஆடி 27, 2026
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்
அண்மைய செய்திகள்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

ஆடி 27, 2026
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

5 நாட்கள் முன்னர்
14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

3 நாட்கள் முன்னர்
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

1 நாள் முன்னர்
கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

6 நாட்கள் முன்னர்
வலி.கிழக்கில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின்  நினைவேந்தல் நிகழ்வு

வலி.கிழக்கில் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In