கனடாவின் சஸ்கட்சுவான் மாகாணத்தில் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த மனிதக் கடத்தல் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி, சோஹெல் ஹடியார் மற்றும் முஹம்மத் மசூம் ஆகிய இருவரையும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், முஹம்மத் மசூம் மீது சுமத்தப்பட்டிருந்த எட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சஸ்கட்சுவானில் வேலைவாய்ப்பு தொடர்பான மனிதக் கடத்தல் வழக்கு ஒன்று விசாரணைக்கு சென்று குற்றவாளித் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் வழக்குகளில் ஒன்று என மூத்த அரச தரப்பு வழக்கறிஞர் லெஸ்லி டன்னிங் தெரிவித்துள்ளார்.
மனிதக் கடத்தல் பல்வேறு வடிவங்களில் இடம்பெறக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், இந்தத் தீர்ப்பு எதிர்கால மனிதக் கடத்தல் வழக்குகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் கனடாவுக்கு புதிதாக வருபவர்களைப் பாதுகாப்பதற்காக மனிதக் கடத்தல் தொடர்பான சட்டங்கள் அமுலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, பாதுகாப்புக்காக அடையாளம் வெளியிடப்படாத வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை குறித்த இருவரும் சுரண்டியுள்ளனர்.
அவர் கனடாவை விட்டு வெளியேறினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அச்சத்தை பயன்படுத்தியதுடன், அவரது வேலை அனுமதியை ரத்து செய்யச் செய்வதாக அச்சுறுத்தி அவரை கட்டுப்படுத்தியதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு சஸ்கட்சுவானில் மனிதக் கடத்தல் தொடர்பான எதிர்கால வழக்குகளுக்கு முக்கிய சட்ட முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.











