தமிழக அரசியல் களத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் வைத்தியர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய 88 வது பிறந்த நாள் விழாவை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்லூரியில் கொண்டாடும் வேளையில் இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
இன்றுடன் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றேன், இனி அரசியல் தொடர்பில் பேசமாட்டேன், அரசியலில் தலையிடவும் மாட்டேன் என்றார்.
எதிர்வரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயட்பாடுகளை அன்புமணி ராமதாஸும் அவரது துணைவியாரும் பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
என்னை காண வருபவர்கள் அரசியல் குறித்து என்னிடம் பேச வேண்டாம். எப்போதும் உங்களுக்கும் எனக்குமான அந்த உறவு மாறாது என கூறியுள்ளார்.











