EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் –  விரிவான விசாரணை நடத்த திட்டம்

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

ஆடி 28, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரம் கண்டறியப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இந்த உறுதி மொழியை அளித்துள்ளார்.

பெல்ஜியத்தின் ‘மொன்ஸ்’ (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ஐரோப்பிய கூட்டுப் படைகளின் உயர்மட்ட இராணுவத் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சி ஊழியராக (intern) பணியாற்றியவேளையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்தமை மற்றும் சர்வதேசக் குற்றவியல் அமைப்பொன்றில் உறுப்பினராக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜிய கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் விபரங்களை பெல்ஜிய அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘நியூ வெஸ்ட்மின்ஸ்டர்’ நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடியப் பெண் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” எனக் குறிப்பிட்டார்.

சந்தேகநபரான அந்தப் பெண் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு முன்னர் கனடாவின் அரச நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் எதிலாவது பணியாற்றியுள்ளாரா என்பது குறித்து, நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பு மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் கனடாவின் பாதுகாப்புப் பரிசீலனை (Security Screening) மற்றும் சரிபார்ப்புச் செயன்முறைகள் மீளாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆடி 29, 2026
கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்
கனடா

கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்

ஆடி 29, 2026
அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஆடி 29, 2026
கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு  அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு
கனடா

கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

ஆடி 29, 2026
அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான  ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு
கனடா

அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

ஆடி 29, 2026
கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  
கனடா

கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

ஆடி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

2 நாட்கள் முன்னர்
இலங்கை சமூக பாதுகாப்பு சபை மாணவர்களுக்கான  புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

3 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!

நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In